Sunday, November 22, 2009

மு

முகத்துக்கு முகம் கண்ணாடி
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா

முதல் கோணல் முற்றுங் கோணல்
முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
முருங்கை பருத்தால் தூணாகுமா?
முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
முன் ஏர் போன வழிப் பின் ஏர்
முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு

No comments:

Post a Comment